ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள்: திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் விபரம்….
திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அறிக்கை:-

அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி. பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…
தமிழக மக்கள் அனைவர
து இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9-வது ஆண்டு நினைவு நாளான 5.12.2025, வெள்ளிக்கிழமை அன்று அம்மா அவர்களுடைய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சி பகுதி, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும், அம்மா அவர்களை நினைவு கூறும் வகையில் அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட இடங்களில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி. அவர்கள் கலந்து கொள்கிறார்.: அதன் விபரம் வருமாறு ….
5.12.2025, வெள்ளிக்கிழமை
——————————————————
🌟காலை 9.30மணி: சோமரசம்பேட்டை
🌟காலை 10மணி: குழுமணி
🌟காலை 10.30மணி: ஜீயபுரம்
🌟காலை 11மணி: முசிறி கைக்காட்டி
🌟காலை 11.30 மணி: துறையூர்
🌟 மதியம் 12.00மணி: மண்ணச்சநல்லூர்
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
என வடக்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

