தேசிய முற்போக்கு திராவிட கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதி கழகத்தை பிரிப்பது குறித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில். BLA-2 முகவர்கள் ஐந்து பேர் கொண்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் பணியாற்றுவது குறித்தும் , ஜனவரி-9, கடலூர் மாநாடு செல்வது குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 9-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் ஸ்ரீரங்கம் பகுதி சார்பாக திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளரும் , மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான சன்னாசிப்பட்டி ஆர்.பாரதிதாசன் தலைமையில் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகில் கனரா வங்கி மற்றும் கரூர் வைசியா வங்கி எதிரில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளரும் டெல்டா மண்டல பொறுப்பாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார் .
மாவட்ட அவைத் தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பி அர்ஜுன் மாவட்டக் கழக துணை செயலாளர் டி நீலமேகம், பகுதி அவை தலைவர் பாலாஜி, வட்ட கழக செயலாளர்கள் சுரேஷ், ரங்கராஜ்,ரங்கன், பாஸ்கர், ரவிச்சந்திரன், வடமலை மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி தேமுதிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
முடிவில் கழக மாற்றுத்திறனாளி அணி துணைச் செயலாளர் சி.வாஞ்சி குமரவேல் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.

