Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிலைதடுமாறி விழுந்த திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர் பரிதாப பலி.

0

'- Advertisement -

 

சைக்கிளில் வரும்போது

நிலைதடுமாறி விழுந்த திருச்சி மாநகராட்சி

துப்புரவு பணியாளர் பரிதாப பலி.

 

உறையூர் போலீசார் விசாரணை.

 

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புது காலனி சேர்ந்தவர் வெள்ளிமலை ( வயது 57), திருச்சி மாநகராட்சி 25- வது வார்டில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வீட்டுக்கு சைக்கிளில் வரும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார். இதில் அவருக்கு தோள்பட்டைகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளிமலை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இது குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.