திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே மன்னார்புரம் மின் வாரிய ஆய்வாளர்
மயங்கி விழுந்து சாவு.
கன்டோன்மென்ட் போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை செட்டியபட்டியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 50). இவர் மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் லயன் ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே திடீரென மயங்கி விழுந்தார் . அவரை உடனடியாக மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஜேசுராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.