திருச்சியில் இளநீர் குடித்தவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த
பிரபல ரவுடி கைது.
திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர், அதன் விவரம் …
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பாண்டி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 40 ). இவர் எஸ் ஐ டி கல்லூரி அருகே இளநீர் குடித்துக் கொண்டு இருந்து உள்ளார் , அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து குணசேகரன் அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அரியமங்கலம் காமராஜ் நகர் அப்துல்லா தெருவை சேர்ந்த ராகவேந்திரன் (வயது 26) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் ரூபாய் 500 பறிமுதல் செய்து உள்ளதாக கூறியுள்ளனர் .