Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் 2 முறை இறங்கி ஏறிய விவிஐபி யின் மிக நீளமான விமானம்

0

'- Advertisement -

நேற்று விவிஐபி-3 விமானம் ஒன்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை முறையில் தரையிறங்கியது.

 

விமான ஓடுபாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் பொருட்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2 முறை இந்த விமானம் இறங்கி, டேக் ஆப் செய்து சோதனை செய்யப்பட்டது. இது, பிரதமரின் பயணத்திற்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது.

 

ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

 

இந்த பயணத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் அடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சில அரசியல் மீட்டிங்குகள், கூட்டணி தொடர்பான சில ஆலோசனைகள், கூட்டணியில் மற்ற சில கட்சிகளை கொண்டு வருவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தேர்தல் சமயத்தில் மோடியின் இந்த வருகை பாஜகவினருக்கு ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று பிரதமர் பயன்படுத்தும் விவிஐபி-3 விமானம் ஒன்று திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் சோதனை முறையில் தரையிறங்கியது. விமான ஓடுபாதையின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் பொருட்டு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2 முறை இந்த விமானம் இறங்கி, டேக் ஆப் செய்து சோதனை செய்யப்பட்டது. இது, பிரதமரின் பயணத்திற்கான முன்னேற்பாடாகக் கருதப்படுகிறது..

 

விமான நிலைய அதிகாரிகள் ஓடுபாதையின் தரம் மற்றும் விமானம் தரையிறங்கும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர். இந்தச் சோதனையின் நோக்கம், பிரதமரின் பயணத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்வதாகும். விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜூலை மாதம் 27-ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறவுள்ள ஆடித்திருவாதிரை திருவிழாவில் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகத் தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

முடிவாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகைக்காக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

 

விமான நிலைய அதிகாரிகள், விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து இந்த பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். பிரதமரின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.