திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர் சாவு.
திருச்சி தந்தை பெரியார் கல்லூரிக்கு முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழை வாங்கச் சென்ற மாணவி திடீர் சாவு.
.
திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் மதுமிதா (வயது 23) இவர் திருச்சி காஜாமலையில் உள்ள ஈவேரா அரசு கல்லூரியில் கடந்த ஆண்டு எம். காம்., பட்டப்படிப்பு முடித்தார். பின்னர் அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக தனது தாய் அகிலாவுடன் கல்லூரிக்கு சென்றார்.
கல்லூரி அருகாமையில் சென்ற போது திடீரென மதுமிதா மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மதுமிதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கே கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீரக பிரச்சனைக்காக மதுமிதா ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது. ஆகவே உடல் நலக்குறைவால் அவர் மரணம் அடைந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருந்த போதிலும் இந்த வழக்கு தொடர்பாக கேகே நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.