திருச்சியில்
பணம் பறித்த சரித்திர பதிவேடு ரவுடி உள்பட 2 பேர் கைது.
பொன்மலை கல்கண்டார்கோட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 45) இவர் கடந்த 23 ந்தேதி தன் வீட்டின் அருகே நடந்து சென்றார் அப்பொழுது பொன்மலைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் அருகே இவர் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி இவரது சட்டை பையில் இருந்த ரூ.800 பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுன் நகரை சேர்ந்த முருகேசன் (வயது 48) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி மற்றும் ரூபாய் 200 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் திருச்சி கல்லுக்குழி முதல் தெருவை சேர்ந்தவர் கோகுல் (வயது 23, ) டிரைவர். இவர் கடந்த 23 ந்தேதி முடுக்குப்பட்டி அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து முடுக்குப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் (வயது24 ) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.