Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் கடன் தொல்லையால். மற்றும் வயிற்று வலியால் இருவர் தற்கொலை .

0

'- Advertisement -

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இரண்டு பேர் தூக்கு மாட்டி தற்கொலை

 

போலீசார் விசாரணை

 

திருச்சி கீழ சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன் இவரது மனைவி முத்து சூர்யா (வயது 35) இவர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

Suresh

இந்நிலையில் கடந்த 11ந்தேதி முத்து சூர்யா வீட்டில் ஜன்னல் கம்பியில் கயிற்றை பயன்படுத்தி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முத்து பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் .காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதேபோன்று திருச்சி பாலக்கரை மாமுண்டி சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43) இவர் உத்தமர் சீலி பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார்

.இந்நிலையில் ராஜசேகர் நிறைய கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடன்காரர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதையடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில்

சேலையை தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டார்.இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.