Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு . தேர்வு கிடையாது . டைப்பிங் தெரிந்தால் போதும். 5 நாட்கள் மட்டுமே உள்ளது. அப்ளை செய்ய வேண்டிய முழு விவரம் .

0

'- Advertisement -

மத்திய அரசு பல்கலைக்கழகமான தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தேவைப்படும் ஜூனியர் உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது .

 

தமிழ்நாடு சட்டம் 2012 எண் 9-கீழ் இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. திருச்சியில் அமைந்துள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் துறைகளில் இருக்கும் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

பணியின் விவரங்கள்

ஜூனியர் உதவியாளர் மற்றும் கணக்கு ஜூனியர் உதவியாளர் என மொத்தம் 6 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் 1 வருடத்திற்கு நிரப்பப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் ஜூன் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

ஜூனியர் உதவியாளர் 5

ஜூனியர் உதவியாளர் (கணக்கு) 1

மொத்தம் 6

வயது வரம்பு

தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூனியர் உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியான தேதியில் அதிகபடியாக 40 வயதைக் கடந்திருக்கக்கூடாது.

 

கல்வித்தகுதி

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், தட்டச்சிற்கு அரசு நடத்தும் தொழில்நுட்ப தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் Higher Grade அல்லது தமிழில் Higher Grade மற்றும் ஆங்கிலத்தில் Lower Grade அல்லது ஆங்கிலத்தில் Higher Grade மற்றும் தமிழில் Lower Grade முடித்திருக்க வேண்டும்.

 

கணக்கு பிரிவில் உள்ள ஜூனியர் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பதார்கள் வணிகத்தில் பட்டப்படிப்பு மற்றும் Tally ERP-யில் டிப்ளமோ 9.0 சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவம் உள்ளதற்கான சான்றிதழ் தேவை.

 

கூடுதலாக இப்பணியிடங்களுக்கு கிளார்க் அளவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் தேவை. பல்கலைக்கழகம், கல்லூரிகள், அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிப்புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

 

Suresh

சம்பள விவரம்

ஜூனியர் உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.19,500 மாத தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

 

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணலின்போது கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றுக்கான உண்மை சான்றிதழை பதிவேற்றம் சமர்பிக்க வேண்டும். முன்னாள் பணி செய்த நிறுவனத்திடமிருந்து பெறப்படும் அனுபவ சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.

 

விண்ணப்பிக்கும் முறை

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.tnnlu.ac.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கட்டணம் செலுத்தியத்தற்கான சான்று இணைத்து, பதிவு/ விரைவு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 டிடி மூலம் செலுத்த வேண்டும். “பதிவாளர், தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம், திருச்சி” என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்.

 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

பதிவாளர்,

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம், நாவலூர்குட்டப்பட்டு, திண்டுக்கல் மெயின் ரோடு, திருச்சிராப்பள்ளி – 620027.

 

முக்கிய நாட்கள்

 

விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 18.06.2025 மாலை 5 மணி வரை

நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஆரம்பக்கட்டமாக 1 வருடம் பணி அளிக்கப்படும். தேவை மற்றும் செயல்திறன் அடிப்படையில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.