கடந்த மாதம் இறுதியில் திருச்சி மாநகர காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் சப் இன்ஸ்பெக்டர்கள் வரை 288 நபர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் செய்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அந்தந்த காவலர்கள் அவர்களுக்குரிய இடத்தில் பணியில் சேர வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார் . ஆனால் அப்போது சில நாட்களில் (மே 8,9 ஆகிய தேதிகளில்) முதல்வர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் பணியிட மாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி உத்தரவு வந்ததாக கூறப்பட்டது

தமிழக முதல்வர் திருச்சி பயணத்தை முடித்து சென்று தற்போது 20 நாட்கள் ஆகிவிட்டது ஆனால் இதுவரை 80 போலீசாரை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . சுமார் 200 க்கும் மேற்பட்ட போலீசார் உயர் அதிகாரிகளின் தேவைகளுக்காக தொடர்ந்து அதே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட காவல் துறையினருக்கு தலைமை அதிகாரி காவல்துறை ஆணையர் காமினி அவர்கள் உத்தரவையே மதிக்கவில்லை என்றால் யார் உத்தரவை மதிப்பார்கள் இந்த அதிகாரிகள் என தெரியவில்லை இன்று காவல்துறை நண்பர்கள் வருத்தம் தெரிவித்து கூறினார் .