8 வருடங்களுக்கு முன் வறுமை கோட்டுக்கு கீழே இருந்தவர் நத்தர்ஷா பள்ளிவாசல் அறங்காவலர் ஆனபின் பல கோடிகளுக்கு அதிபதி ஆனது எப்படி ?… முழு விபரம்
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு தனது குழந்தைகளுடன் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் குடியேறியவர் அல்லாபக்ஷ்.
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் தனது குழந்தைகளுக்கு சாப்பாடு மற்றும் படிப்பு செலவு ஏற்க முடியாததால் மதர்சாவில் சேர்த்து விட்டார் . இங்கு சாப்பாடு மற்றும் கல்வி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது .
பின்னர் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திருச்சி சின்ன கடை வீதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாம் பணியில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சேர்த்து விடுகின்றனர் .
இங்கு பணி செய்து கொண்டு பழைய வாட்ச் களை வாங்கி சரி செய்து அதை புதுசு போன்று விற்பனை செய்ய தொடங்கினார் . இதுதான் அவர் தொடங்கிய முதல் 420 பணி. பின்னர் போலியாக ரூம் ஸ்ப்ரே தயார் செய்து விற்பனை செய்கிறார் .
பின்னர் மேல சிந்தாமணி பகுதியில் ப்ளூ ஃபிலிம் சிடிகளை விற்பனை செய்வதுடன் திருட்டுப் பொருட்களையும் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
சிறிது பணம் சேர்ந்தவுடன் நேர்மையான அரசியல்வாதி என பெயர் பெற்ற முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களின் மகன் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் அபிபூர் ரகுமான் முலம் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட துணை தலைவர் ஆகிறார் .
திருச்சி
நத்தர்வலி பள்ளிவாசலுக்கு 11, 500 ஏக்கர் சொந்தமாக இருந்தது. தற்போதும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பள்ளிவாசலுக்கு சொந்தமாக உள்ளது இதனை பராமரிப்பதற்காக 1965 ஸ்கீமின் படி அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த அறங்காவலர் குழுவில் பரம்பரை டிரஸ்ட் மற்றும் பங்காளி டிரஸ்ட் என ஐந்து பேர் சொத்துக்களை பராமரிக்க வேண்டும் . இவர்களை கணக்கு வழக்குகளை மேற்கொண்டு வருவார்கள் . மூணு வருடங்கள் இவர்கள் இந்த பொறுப்பில் இருந்த பின் அடுத்த வரும் அறங்காவலர் குழுவிடம் சரியான கணக்கு வழக்குகளை ஒப்படைத்து செல்ல வேண்டும் என்பது விதி .
1982 முதல் 92 வரை ஆர்ட்டின் பீடி உரிமையாளர் தலைமை அறங்காவலராக சிறப்பாக பணியாற்றினார்.
பாதுஷா 1992 முதல் 2012 வரையில் பணியாற்றினார் .
அறங்காவலர் குழு மூன்று ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என விதி இருப்பதால் 2022ம் ஆண்டு முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான் பரிந்துரையின் பேரில் அல்லா பக்ஷ் தலைமை அறங்காவலராக பதவி ஏற்கிறார் . பரம்பரை டிரஸ்டில் ஹார்டின் பீடி மகன் நூருதீன் மற்றும் சலாவுதீன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர் . பங்காளி டிரஸ்டில் தர்கா ஆமீன் 30.3.2022 அன்று நியமிக்கப்படுகிறார் .
தற்போது மூன்று ஆண்டுகள் முடிந்த பின்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறார், இது ஒரு புறம் இருக்கட்டும் .
இவர் அறங்காவலராக பணியாற்ற பின் கோடி கோடியாக பணம் சேர்த்தது எப்படி என்பதை காணலாம்
22.4.2022 அன்று யுடிஐ பேங்கில் இருந்து ரூ. 5 லட்சம் பணம் எடுக்கிறார் . எதற்கு யாருக்கு என்ற கணக்கு இல்லை.

27.4.2022 முதல் 18.5.2022 வரை 21 நாட்களில் தர்காவுக்கு சொந்தமான வங்கி கணக்கு உள்ள எஸ்பிஐ உறையூர் கிளையில் ஜாகீர் உசேன் என்பவர் மனம் 13 லட்சம் ரூபாய் பணம் எடுத்து செலவு செய்து உள்ளார் . ஆனால் அதற்குரிய ரசீதுகள் எதுவும் இல்லை …
இதேபோன்று தேவர் ஹால் எதிரில் உள்ள வங்கி கணக்கிலும் ஊழல் அடைந்து உள்ளது . இந்த வங்கியில் ஒரு கோடி ரூபாய் இருந்தது 5.4.2024 அன்று வங்கியில் மீதி இருப்பு ரூ.15,512 மட்டுமே.
நத்தர்ஷா பள்ளிவாசலுக்கு சொந்தமாக 75 வீடுகள். 30 கடைகள் தரைக் கடைகள் என மாதாமாதம் வாடகை வசூல் செய்யப்படுகிறது .
26.2. 2022 இல் டூ வீலர் மற்றும் கார் பார்க்கிங் வாடகை வசூல் செய்யும் கணக்கு எதுவும் இல்லை .
பள்ளிவாசலுக்கு அருகே சுற்று சுவரை உடைத்து கேமராவை திருடுய வழக்கில் 9.6.2022 அன்று கோட்டை காவல் நிலையத்தில் FIR பதியப்பட்டது . இதில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ. ஒரு லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டும் இதுவரை அவர் வழங்கவில்லை .
.
2023 ல் தர்காவுக்கு சொந்தமான 12500 சதுரடி இடத்தை 20 பிளாட்டுகளாக பிரித்து ரூ.5 லட்சம் முதல் 6 லட்சம் வரை வசூல் செய்துள்ளார் .
தரை கடைகளுக்கு ரசீது இல்லாமல் 500 சதுர அடிக்கு ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூல் செய்துள்ளார் .
பள்ளிவாசல் இடத்தை இடத்தை நாராயணன் என்பவருக்கு பல லட்சம் பெற்றுக் கொண்டு கட்டிடம் கட்ட அனுமதி அளித்துள்ளார் . ஆனால் இதற்கு மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவு , திருச்சி மாவட்ட ஆட்சியர், வக்பு போர்டு ஆகியோருக்கு புகார் அளித்த பின்பு மாநில அரசு தணிக்கை குழு 5.6.2024 வந்து தணிக்கை செய்தபோது செக் இருப்பு , பதிவேடு, வங்கியில் பள்ளிவாசல் கணக்கில் பணம் எடுக்க அறங்காவல ட்ரஸ்ட் உறுப்பினரிடம் எந்த ஒப்புதலும் வாங்காதது தெரியவந்தது .
எட்டு வருடங்களுக்கு முன் வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவருக்கு இன்று மனைவி பெயரில் மூன்று வீடுகள் மற்றும் கார் உள்ளது மேலும் திருச்சி சஞ்சீவி நகரில் ரூ.3 கோடிக்கு பங்களா ஒன்றும் தற்போது இவருக்கு உள்ளது.
தற்போது மீண்டும் அறங்காவலர் பணியில் நீடிக்க வேண்டும் இதேபோன்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் உள்ளார் அல்லா பக்ஷ்.
இவருக்கு துணையாக நேர்மைக்கு பேர் போன காதர் மைதீன் அவர்களின் மகன் மட்டுமே உறுதுணையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
கடைசியாக வந்த தகவலின் படி தற்போது இவர் அறங்காவலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என தெரிய வருகிறது .
இப்படிப்பட்ட நபரை இந்தியன் முஸ்லிம் லீக் கட்சியின் தற்போதைய மாவட்ட பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்குவாரா? பேராசிரியர் காதர் மொய்தீன்