சீரான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் பாதையில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம் .
அந்த வகையில் திருச்சியின் முக்கிய இடங்களில் இன்று (மே 14) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

எனவே, இன்று புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பின் வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மின் தடை பகுதிகள் விபரம்:
திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர் மற்றும் செம்பட்டு தணை மின்நிலையங்களைச் சேர்ந்த தங்கையாநகர், அன்பில்நகர், முல்லைநகர், வசந்தநகர், குறிஞ்சிநகர், உடையான்பட்டிரோடு, கல்யாணசுந்தரம்நகர், குளவாய்ப்பட்டி, காமராஜ்நகர், திருவளர்ச்சிப்பட்டி, காவேரிநகர், குடித்தெரு, வயர்லெஸ்ரோடு, புதுக்கோட்டை மெயின்ரோடு, அங்காளம்மன்தெரு, பசுமைநகர், சேலத்தார்நகர், மொராய்சிட்டி, செம்பட்டு, பயோநீர் என்ஜினீயரிங், மன்னை நாராயணன்தெரு, எஸ்.பி.ஐ.ஓ.ஏ.பள்ளி, வி.எம்.பி.டி.நகர், கிளாசிக் அவென்யூ, ராயல்பார்ம்ஸ், ராயல்வில்லா ஆகிய இடங்களில் இன்று மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது .