திருச்சியில் 2 மாடியில் தண்ணீர் தொட்டி மேல் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி
திருச்சியில்
2 மாடியில் தண்ணீர் தொட்டியில் குடிபோதையில் தூங்கிய எலக்ட்ரீஷியன் தவறி விழுந்து பரிதாப பலி.

போலீசார் விசாரணை.
திருச்சி மேல சிந்தாமணி, காவேரி நகரை சேர்ந்தவர் ராபர்ட் க்ளைவ் (வயது 34). எலக்ட்ரீஷியன் மதுபழக்கத்திற்கு அடிமையானவர். இவர் தினசரி மதுபோதையில் வீட்டிற்கு வந்து 2 -வது மாடியில் உள்ள தண்ணீர்தொட்டி மேல் தூங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி தரைத்தளத்தில் விழுந்து, அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயம் அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.