Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தகாத உறவை கண்டித்த மனைவியின் கை, கால்களை கட்டி போட்டு உல்லாசமாக இருந்து கொடூர கொலை செய்த ஜிம் மாஸ்டர்.

0

'- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் பாஸ்கர் (வயது 34).

 

ஜிம் மாஸ்டரான இவர், ஓசூரில் 4 இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சசிகலா(33). இவரும் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தார். இவர்களுக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சசிகலா கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதி இரவு, சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி, அவரை தனியார் மருத்துவமனைக்கு பாஸ்கர் கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சசிகலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்பேரில், சிப்காட் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பெங்களூருவில் இருந்து வந்த சசிகலாவின் பெற்றோர், தங்கள் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

 

Suresh

சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், சசிகலா கழுத்தில் துணியால் இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, நேற்று பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பெங்களூருவைச் சேர்ந்த சசிகலாவை, பேஸ்புக் மூலம் காதலித்து பாஸ்கர் திருமணம் செய்துள்ளார். இதனிடையே, ஓசூரில் வேறு ஒரு பெண்ணுடன் பாஸ்கர் தொடர்பு வைத்திருந்ததால், அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 

சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது, சசிகலாவின் கை- கால்களை கட்டிப்போட்டு, பாஸ்கர் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த பாஸ்கர், கை-கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் சசிகலாவின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர், கொலையை மறைக்க உடலுறவின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பிரேத பரிசோதனையில், உடலுறவின் போதே, கழுத்தை நெரித்து சசிகலா கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இதன்பேரில், பாஸ்கர் கைது செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.