Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டத்தில் ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் .

0

'- Advertisement -

சிஐடியு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுத் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் சிஐடியூ திருச்சி மாவட்ட அலுவலகத்தில்

இன்று நடைபெற்றது.

 

கூட்டத்திற்கு

மாநில தலைவர் வி.குமார் தலைமை

தாங்கினார்.

சங்க மாநில பொதுச் செயலாளர்

ஆர். புவனேஸ்வரன்

வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

 

கூட்டத்தில்

கொள்முதல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கக் கோரி ஜுன் 19-ந்தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்துவது.

 

மே. 20 ம்தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் திரளாக கலந்து கொள்வது.

 

காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

Suresh

2013 முதல் 2016 வரை பணியில் சேர்ந்த பருவ கால பணியாளர்களை 12(3) ஓப்பந்தத்தின் அடிப்படையில் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை காலதாமதமாக இயக்கம் செய்யப்பட்டதால் ஏற்படும் எடை குறைவிற்கு கொள்முதல் பணியாளர்களிடம் இழப்பு தொகை வசூல் செய்யக்கூடாது.

 

பொது விநியோக திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் ,

திருச்சி இன்டேன் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் 13 பணியாளர்களை தொழிலாளர் துணை ஆணையர் உத்தரவின் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

 

இடைக்கால நிவாரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிலிண்டர் சப்ளை நிர்ணயம் செய்துள்ள ரூ. 29.40 ஐ வழங்க வேண்டும்.

10 ஆண்டுகள் பணி முடித்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடுத்த நிலையில் பச்சை அட்டை வழங்க வேண்டும். இந்திய உணவுக்கழகத்திற்கு இணையான கூலி வழங்க வேண்டும்.

நவின ஆலைப்பிரிவு பணியாளர்களுக்கு நீதிமன்ற உத்திரவிள்படி ஊதிய முரண்பாட்டினை களைந்து நிலுவைத்தொகை வழங்க வேண்டும்.

கிடங்கு மற்றும் அலுவலகங்களில் பணி புரியும் கணினி மற்றும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பணி ஓய்வு பெற்ற கழக பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க வேண்டும்.

என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 

கூட்டத்தில்

மாநில நிர்வாகிகள்

சுப்புராஜ், கதிரேசன், பாண்டியன், ராசப்பன், ராஜாங்கம் உள்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.