Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி உறையூரில் மனைவியுடன் தகராறில் பெயிண்டர் தற்கொலை

0

'- Advertisement -

திருச்சி உறையூரில்

மனைவியுடன் தகராறு;

வாலிபர் தற்கொலை

 

போலீசார் விசாரணை

 

திருச்சி உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 26) இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புகழேந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.