கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் ஆத்திரமடைந்த தங்கை அக்காவை கொன்ற சம்பவம் சோழத்தரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே அகர சோழத்தரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 45). இவரது கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் தனது மூன்று பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் இவரது உடன் பிறந்த தங்கை சரிதா(வயது-40) வின் கணவர் மேகலைவன் (வயது 47) என்பவருக்கும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அடிக்கடி இதனை தங்கை சரிதா தட்டி கேட்கவே கள்ளக்காதலை கைவிட மறுத்தார் அக்கா சங்கீதா.
இந்நிலையில் சம்பவத்தன்று சங்கீதா வீட்டுக்கு கணவர் சென்றுள்ளார் . அங்கு அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் தங்கை சரிதா மணிலா அறுவடைக்கு தனது 17, 16 வயதுள்ள 12வது மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்கள் உடன் சென்று உள்ள அப்போது அதை சேர்ந்த சிலர் உனது கணவர் அக்கா வீட்டில் உள்ளார் என கூறியுள்ளனர் .
அக்கா வீட்டுக்கு வேகமாக சென்ற சரிதாவை பார்த்ததும் கணவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் . அப்போது எதிர்பாராத விதமாக சரிதா நீ உயிருடன் இருந்தால் தானே என் கனவுருடன் தொடர்பு கொள்வாய் என கூறி தனது மகன்களுடன் சேர்ந்து தனது அக்கா சங்கீதாவை தாக்கியுள்ளனர் . இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்தார்.
அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோழத்தரம் போலீசார் இறந்த சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சரிதா மற்றும் அவரது இரண்டு மகன்களை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். தனது கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை கைவிட மறுத்த சொந்த அக்காவை தங்கையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.