சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் செல்லியம்பாளையத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். தற்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை தெரிந்ததும், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் 17 வயது சிறுமியை குழந்தை திருமணம் செய்து, கர்ப்பம் ஆக்கிய மணிகண்டனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.