Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே அனுமதியின்றி மது விற்ற நபர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில்

அனுமதியின்றி மது விற்ற முதியவர் கைது..

 

திருச்சி, ஓயாமரி மயானம் அருகே அனுமதியின்றி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோட்டை போலீசார் அங்கு சோதனை பணியை மேற்கொண்டனர். அப்பொழுது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நெற்குப்பை வெள்ளாளர் தெருவை சேர்ந்த கிரிதரன் (வயது 60) என்பவரை கைது செய்தனர். கிரிதரன் விற்பனைக்கு வைத்து இருந்த 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்து கொண்டு மேலும் அவருடன் இருந்த சுகுமார் என்பவரை கோட்டை காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.