கராத்தே கற்ற திருச்சி புத்தூர் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வழங்கினார்.
திருச்சி புத்தூர் நால்ரோட்டில் உள்ள விழி குறைபாடு மற்றும் விழி இழந்தோர் பள்ளி மாணவிகளின் கராத்தே சாதனை.
இப்பள்ளி மாணவிகள் ஆலன் திலக் ஷிட்டோரியோ கராத்தே கற்று இதில் கட்டா செய்து சான்றிதழ் மற்றும் பதக்கம் பெற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் பரிசுகளை வழங்கினார் .

இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாலதி துணை தலைமை ஆசிரியர் வி. சுப்பிரமணியன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் எம். வாசுதேவன் (பிளாக் பெல்ட் 8th டான் ) மற்றும் மாணவிகள்,
ஆசிரியர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.