Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்கள் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவன், போதையில் குளித்த முதியவர் என 2 பேர் உயிரிழப்பு .

0

'- Advertisement -

திருச்சியில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்கள் இரண்டு பேர் உயிரிழப்பு .

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் சுஜித் (வயது 21) இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர்

Suresh

கருமண்டபத்தில் உள்ள ஒரு விடுதியில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று சுஜித் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ராம்ஜி நகர் அரவாக்குடி ரெயில்வே கேட் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சுஜித் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்புத்துறை அலுவலர்கள் இணைந்து சுஜித் உடனல மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில்

திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம் கொள்ளிடம் ஆற்றில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 60) என்பவர் குடிப்போதையில் ஆற்றில் குளித்து உள்ளார். அப்பொழுது கோவிந்தன் எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்து திருவரங்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு துறை அலுவலர்கள் உதவியுடன் கோவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.