திருச்சி அரசு மருத்துவமனையில்
ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை.
கரூர் மாவட்டம் தொம்பம்பட்டி கிழக்கு தென்னிலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயகு 42). இவர் முதுகு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

வலி பொறுக்க முடியாத பழனிச்சாமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆசிட்டை குடித்துள்ளார். இதற்காக கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கு இருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர்
மருத்துவமனை கழிவறைக்கு பின்புறம் துாக்கமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனைபோலீசார் பழனிச்சாமி உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.