Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நீதிமன்ற ஊழியரை அருவாளால் வெட்டிய 3 பேர் கைது. தப்பி ஓட முயன்ற ஒருவர் கால் முறிந்தது.

0

'- Advertisement -

திருச்சி நீதிமன்ற ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடா்பாக 3 பேரை போலீஸாா் நேற்று.செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதில் தப்பியோட முயன்ற ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞா் தெருவை சோ்ந்தவா் ஷ. முகமது உசேன் (வயது 35). திருச்சி 4-ஆவது குற்றவியல் நீதிமன்ற உதவியாளரான இவா், கடந்த சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன் நின்றபோது, அவா் மீது மோதுவது போல பைக்கில் மூன்று பேர் வந்துள்ளனா்.

 

இதுகுறித்து அவா் அந்த நபர்களிடம் கேட்டபோது, ஆத்திரமடைந்து அவர்கள் அரிவாளால் முகமது உசேனை வெட்டிவிட்டு மூவரும் தப்பி ஓடிவிட்டனர் .

 

இதில் பலத்த காயமடைந்த முகமது உசேன் துவாக்குடி அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

 

அவர் அளித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸாா் காவல் நிலைய வழக்குப் பதிந்து தப்பிச்சென்ற நபா்களை தேடி வந்தனா்.

 

இந்நிலையில், துவாக்குடி சொசைட்டி தெரு பகுதியில் ஒருவா் ஆயுதத்துடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவதாக காவல் ஆய்வாளா் ஈஸ்வரனுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை தகவல் வந்தது. அங்கு சென்று பாா்த்த போது, அதே பகுதியைச் சோ்ந்த பா. சாந்தகுமாா் (வயது 25) தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தாா்.

 

போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடி, அப்பகுதியில் உள்ள சறுக்குப் பாறையில் குதித்துள்ளாா். இதில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 

போலீஸாா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நீதிமன்ற ஊழியா் உசேனை அரிவாளால் வெட்டியது, அவரும் அவரது நண்பா்களும் எனத் தெரியவந்தது.

 

இதையடுத்து, துவாக்குடி மலை வடக்கு அக்பா் சாலை பகுதியை சோ்ந்த மணி (வயது 32), சொசைட்டி தெருவைச் சோ்ந்த பிரேம் (வயது 30) மற்றும் சாந்தகுமாா் ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

 

சாந்தகுமாா் சிகிச்சை பெறும் நிலையில் மற்ற இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மத்திய சிறையில் அடைத்து உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.