தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக் ஏற்பாட்டில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி .
தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூரில் தெருமுனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 36 மற்றும் 36 ஏ வார்டுகளின் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் மேல அம்பிகாபுரம் பகுதியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி நடைபெற்றது.
இந்த கூட்டம் மாநகர செயலாளரும் திருவெறும்பூர் மண்டல் குழ தலைவருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்றது.

தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பகுதி கழக செயலாளர் நீலமேகம், கவுன்சிலர் கே.கே.கே. கார்த்திக், வட்ட செயலாளர்கள் சுரேஷ், ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
கூட்டத்தில் சேலம் சுஜாதா உட்பட பகுதி கழக நிர்வாகிகள், வட்ட பிரதிநிதிகள், மகளிர் அணி உள்ளிட்ட சார்பு அணியினர் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.