திருச்சி காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள அனைத்து வியாபாரிகள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.10 ஆயிரம். எம்.கே.எம்.காதர் மைதீன் அறிவிப்பு .
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் குடும்பத்தில் உள்ள
அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை.
வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் அறிவிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் செயலாளர் எம்.கே.எம்.காதர் மைதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் உறுப்பினர்களின் குழந்தைகளான பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வித் தொகை வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தமிழக அரசு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துவிட்டது. தமிழ்நாடு கல்வியில் பெரும் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக வரும் 2025 ஆம் ஆண்டு 10,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தவுடன் ஒற்றுமை சங்கத்தின் சார்பாக கல்வி உதவி தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்.
இந்த கல்வி ஊக்கத்தொகை காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் (எந்த சங்கத்தில் இருந்தாலும்) பொருந்தும். உறுப்பினர்கள் இல்லாமல் சிறிய,பெரிய அளவில் வியாபாரிகளாக இருந்தாலும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களாக இருந்தாலும், பாரம் ஏற்றும், இறக்கும் அனைத்து தொழிலாளர்களாக இருந்தாலும், காந்தி மார்க்கெட்டை சுற்றிலும் தள்ளுவண்டிகள், கை வண்டிகள், பூ, பழம், காய்கறி, டீ, டிபன் வியாபாரம் செய்பவர்களாக இருந்தாலும்,மீன் மார்க்கெட், உருளைக்கிழங்கு மண்டி, வாழைக்காய் மண்டி புதிய வெங்காயமண்டி, நெல்பேட்டை தெரு, பழக்கடை லைனில் வியாபாரம் செய்வார்களாக இருந்தாலும், அனைத்து சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ரிக்க்ஷா, கைவண்டி ஆட்டோ, வேன்கள் ஓட்டுநர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் குழந்தைகள் அனைவருக்கும் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு 10,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காந்தி மார்க்கெட்டை நம்பி உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள் அனைத்து குடும்பங்களிலும் கல்வி வளர வேண்டும் என்பதற்காக இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபின் 80 சதவீதத்திற்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2025 ஆம் ஆண்டு கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் ஒற்றுமை சங்க செயலாளர் எம்.கே.எம்.காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.