போனிடா வின் 8 வது கிளை திருச்சியில் புது பொலிவுடன் திறக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திறந்து வைத்தார் .
தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எளிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் போனிடா நிறுவனம்
கோயமுத்தூரில் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
போனிடா நிறுவனத்தின் 8வது கிளை புது பொலிவுடன் திருச்சி கரூர் பைபாஸ் அண்ணாமலை நகரில்
திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த திறப்பு விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி.திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த போனிடா நிறுவனத்தில் தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளைக் கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்க விளைவுகள் இல்லாத எளிய முறையில் மிக குறைந்த செலவில் இங்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக இந்த நிறுவனத்தின் இயக்குனர் கவிதா கதிர்வேல், அமுதா சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த திறப்பு விழாவில் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகரன்,
மற்றும் கிளையின் பொறுப்பாளர்கள் பிரேம்குமார், சிவராமன் மற்றும் நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.