Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் மயங்கி விழுந்த ஓட்டுநர் பரிதாப பலி

0

'- Advertisement -

திருச்சி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகத்தில்
மயங்கி விழுந்து அரசு பேருந்து ஓட்டுனர் சாவு.
கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை .

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் (வயது 58). அரசு பேருந்து ஓட்டுனர் .
இவர் உப்பிலியபுரம் பனிமனையில் பணிபுரிந்து வந்தார் .நேற்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பெரிய மிளகு பாறை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்திற்கு வந்தார் .அங்கு யாரும் எதிர்பாராத நேரத்தில் மயங்கி விழுந்தார்.

Suresh

உடனே அவரை அங்குள்ள  ஊழியர்கள் மற்றும் காவலர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி  மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர் .

ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் .

இது குறித்து முத்தையன் அவர்களின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.