திருச்சி கருமண்டபத்தில் 91 வயது முதியவர் தூக்கிட்டு தற்கொலை
வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் .
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 91). இவர் கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவரது குடும்பத்தினர் புறக்கணித்து வந்த உள்ளனர்,,
இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த நடராஜன் நேற்று மாலை வீட்டு உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் வெளியே சென்று வீடு திரும்பிய அவரது மனைவி கோவிந்தம்மாள் வீட்டிற்கு வந்ததும் நடராஜன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து செசன்ஸ் கோர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் பெயரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.