திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற இளைஞர் கைது.ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் .
திருச்சி, ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக
எ.புதுார் போலீசாருக்கு நேற்று புதன்கிழமை (ஜன 22ம் தேதி) ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் எ.புதூர் காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 36) என்பவரை எ.புதுார் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.