Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

0

'- Advertisement -

திருச்சி ரங்கத்தில்
வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது.

Suresh

திருச்சி, திருவானைக்கோயில் கீழ கொண்டையம்பேட்டை, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் (வயது 24), இவர் நேற்று தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்க மர்ம நபர் ஒருவர் இவரிடமிருந்து செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார், யுவராஜ் தர மறுத்ததால் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய மர்மநபர் அவரது சட்டை பையில் இருந்து பணம் ரூ.500 பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார் .

இது குறித்து யுவராஜ் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவானைக்கோயில், பாரதி தெருவைச் சேர்ந்த சரித்திரபதிவேடு ரவடியான ஜீவாவை (வயது25) பணம் வழி பறித்ததாக கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.