அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ரூ.25 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்தியவன் . கொள்ளையடித்த பணத்தை திமுக கட்சி நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளான்.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரின் வாட்ஸ் அப், ஸ்கிரீன் ஷாட் செல்போன் தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்து வருகிறது.
சைபர் ஆய்வகத்தில் கொடுத்துள்ள செல்போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் ரெக்கவரி செய்துள்ள நிலையில் வாட்ஸ் அப் ஷாட்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது. மிரட்டி எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றவர்களுக்கு பகிரப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் ஆய்வுக்கு உட்படுத்துகின்றது.
ஞானசேகரின் வாட்ஸ்அப் சாட் மற்றும் கால் ஹிஸ்டரிகளை சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், ஞானசேகரன் இரவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
பள்ளிக்கரணை பகுதிகளில் நடைபெற்ற மூன்று கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது சிசிடிவியில் பதிவாகி உள்ளதாக பள்ளிக்கரணை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். பல வழக்குகளில் ஞானசேகரன் லாவகமாக தப்பி வந்துள்ளான்.
கொள்ளையடித்த பணத்தில் திமுக கட்சிக்காக நலத்திட்ட பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த பள்ளிக்கரணை போலீஸார் ஞானசேகரனை நெருங்கும் வேளையில் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளான் என்று போலீஸார் கூறுகின்றனர்.
எனவே இந்த வழக்குகளிலும் சிறையில் தள்ளப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞானசேகரன் மீது குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது.
ஞானசேகரன், கடத்தல் வழக்கில் ரூ.12 லட்சம் மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஈடுபட்டு 2018 ஆம் ஆண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ல் ஒருவரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்:- ‘ஞானசேகரன், உத்திரமேரூர் அருகே, பாக்கம் கிராமத்தில், 2016ல் தங்கி, கார் திருட்டில் ஈடுபட்டு வந்து உள்ளான். பின்னர், வாகன பதிவு எண்களை மாற்றி பிற மாநிலங்களில் கார்களை விற்பனை செய்தான்.
ஜூலை 30, 2018 அன்று டைல்ஸ் ஷோரூம் பார்ட்னர் பாலச்சந்திரனைக் கடத்திச் சென்று, அவரை பாதுகாப்பாக விடுவிக்க அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார். அவரது குடும்பத்தினரும், உறவினர் முத்துக்குமாரும் பணத்தை கொடுக்க ஒப்புக்கொண்டதையடுத்து, மதுராந்தகம் மேம்பாலத்தில் பணம் அடங்கிய சூட்கேஸை தரையில் இறக்கி வைத்து செல்லுமாறு ஞானசேகரன் கூறினார். ஆனால் அவரது குடும்பத்தினர் சேர்ந்து 12 லட்சத்தை மட்டுமே கொடுத்தனர். அந்தத் தொகையை மேம்பாலத்தில் வைத்து அவருக்குக் கொடுத்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் பாலச்சந்திரனை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். மீதம் இருந்த 13 லட்சத்தை மேல்மருவத்தூர் அருகே பாலச்சந்திரனின் குடும்பத்தினர் ஒப்படைக்கச் சென்றபோது, அப்போதைய மதுராந்தகம் காவல் ஆய்வாளர் டி.ஆண்டனி ஸ்டாலின், அவரது குழுவினர் சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்து, பாதிக்கப்பட்டவரை மீட்டனர்.
அந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஞானசேகரனின் தாய், மனைவியுடன் மூன்று முக்கிய சந்தேக நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து 5 லட்சத்தை போலீசார் மீட்டனர். இது தவிர, அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழிலதிபரை மிரட்ட பயன்படுத்திய போலி துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது எனக் கூறியுள்ளனர் .