Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சத்திரம் அண்ணா சிலை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்.

0

'- Advertisement -

திருச்சி சிந்தாமணி
அண்ணா சிலை அருகில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
யார் அவர் ? போலீசார் விசாரணை

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Suresh

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கிரேசி மேரி கோட்டை கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.