திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்
போலி பாஸ்போர்ட்டில் வந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நியாஸ் (வயது51). இவர் கடந்த 25 ந் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்து உள்ளார். அப்போது அங்கு இருந்த இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முகமது நியாஸ் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெயர், தன் தந்தை பெயர், தன் தாயின் பெயர் மற்றும் தன் மனைவியின் பெயர் ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது குறித்து இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து முகமது நியாசை கைது செய்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம், வெளிபட்டினம், புலிக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் இவர் கடந்த 25ம் தேதி மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ராஜசேகரன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து தன் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை மாற்றி கொடுத்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது.
இது குறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசர் ராஜசேகரனை கைது செய்தனர்