Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அளித்த மனுவுக்கு 20ம் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு

0

'- Advertisement -

 

திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம்


திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை மனு

Suresh

20-ந் தேதி பேச்சு வார்த்தைக்கு அழைப்பு.

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இனை ஆணையர் கல்யாணியை சந்தித்து இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து அடிமனை உரிமையாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாதன் கூறுகையில்,
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் (18-03-2024) பிறப்பித்த உத்தரவின் பேரில் இதுநாள் வரை எந்த ஒரு பதிலும் தரவில்லை ஆகையால் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவர்கள் மனு மீது பரிசிலனை செய்து வருகான்ற 20-ந் தேதி அன்று வாருங்கள் என்று வாய்மொழி உத்தரவு அளித்துள்ளார் என்றார்.

இந்த சந்திப்பின் போது திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ) பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் கலைமணி மற்றும் கவுன்சிலர் அப்பீஸ் முத்துக்குமார், பிரஸ்.வெங்கடேசன்,பாஸ்கர் ஞானமூர்த்தி, ராதாகிருஷ்ணன் தேவி ராஜா ஜெமினிரவி முருகானந்தம் கண்ணன் மற்றும் அடிமனை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.