திருச்சி தெற்கு மாவட்ட மாநகர திமுக இளைஞரணி சார்பாக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியது….
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை :
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.
தமிழக துணை முதல்வரும்,மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர திமுக இளைஞர் அணி சார்பாக திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக் ஆகியோர் தலைமை தாங்கினர். திருச்சி மாநகரச் செயலாளர் மண்டல குழு தலைவர் மதிவாணன்.
தலைமை செயற்குழு
வண்ணை அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பாலமுருகன், ரவீந்திரன், தேசிங்கு ராஜா, பெர்னாடிசாமிநாதன், விஷ்ணுவரதன், சையத் சாகிப், அல்லாஹ் பிச்சை, ரஞ்சித்,கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத்குமார் நன்றி கூறினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை
மக்களுக்கு பயனுள்ள விதத்தில் கொண்டாடி வருகிறோம்.
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே, மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
தற்போது, உடற்கல்வி உதவியாளர் பணி இடங்களுக்கு 3000
ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்து
அவர்களுக்கு பணி வழங்கப்படக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்
தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக
3000 பேரையும் பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது உண்மைதான்.
இடைநிலைப்பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள்
கடந்த 10 ஆண்டுகளாக
கண்டுகொள்ளப்படவில்லை.
பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்
படவில்லை.
ஆனால்,
அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம்.
முதல்வரின் உத்தரவை பெற்று அவர்களுக்கும் மிக விரைவில்
பணி வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தொடர்ந்து
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன்
தமிழகத்தில் மன்னராட்சி நடைபெறுவதாக கூறியுள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு,
இரண்டு தலைவர்களும் பேசி,
தங்களுடைய கருத்துக்களை பரிமாறி கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எனவே, இதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்றார்.