50க்கும் மேற்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தோர் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் .
அஇஅதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் சீரிய தலைமையை ஏற்று..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் முன்னிலையில்
திருச்சி, மணப்பாறை சட்டமன்ற தொகுதியை சார்ந்த அமமுக.வின் மாவட்ட பிரதிநிதி S.சாகுல் அமீது ரியாஸ் அவர்களது தலைமையில், அமமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராஜா முகமது, தலைமை கழக பேச்சாளர் அண்ணாமதி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் சேக் அப்துல்லா, மாவட்ட அம்மா பேரவை துணைத்தலைவர் திருமால்சாமி, வட்ட செயலாளர் சுப்பிரமணி, சிவகுமார், மல்கர்ஷா, ரஜினி ராஜ், செபாஸ்டியன் ராஜ், வட்ட பிரதிநிதி பழனிசாமி, மெம்சாய், மற்றும் தர்பார், முருகேஷ் ஆகியோருடன் 50.க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தங்களை தாய் கழகமான அஇஅதிமுகழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை மணப்பாறை நகர கழகச் செயலாளர் பவுன் ம.ராமமூர்த்தி அவர்கள், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் L.எத்திராஜ் மற்றும் வார்டு கழகச் செயலாளர் D.சாய் சுரேஷ்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் .