Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி அக்கவுண்ட்ஸ் செக்சன் அலுவலர்கள் அட்டகாசம். ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் கதறல்.மேயருக்கும் பங்கு?

0

 

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் நலனுக்ககளுக்காக தினம் தினம் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தங்கள் உடல் நலம் பாதித்தாலும் மற்றவர்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழ உழைத்த திருச்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நம்மிடம் கண்ணீருடன் தெரிவித்தது,

நாங்கள் எங்கள் உடல்நலம் பாதித்தாலும் ஓயாமல் உழைத்து ஓய்வு பெற்ற பின் எங்களது ஓய்வு பணம் மற்றும் பிடித்தம் செய்த பணத்தை மாநகராட்சி அக்கௌன்ட் செக்சனில் உள்ள அலுவலர்களிடம் சென்று கேட்டால் ரூ.20.000 முதல் முப்பதாயிரம் வரை தர வேண்டும் என கேட்கிறார்கள்

நாங்கள் உழைத்த பணத்தை உங்களுக்கு ஏன் தர வேண்டும் என்று கேட்டால் பணம் கொடுத்தா தான் தர முடியும் என கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக எங்களை அழக்கழித்து வருகின்றனர் .

திருச்சி மாநகராட்சி மேயரிடம் சென்று முறையிட்டால் நான் கூறுகிறேன் சென்று பாருங்கள் அக்கவுண்ட்ஸ் செக்ஷனில் கூறுகிறேன் என கூறுகிறார் .

மீண்டும் அக்கவுண்ட்ஸ் அலுவலர்கள் மேயிரிடம் சென்றாயா ? மேலும் ரூ.10, ஆயிரம் தரவேண்டும் என கண்டிப்பாக கூறுகின்றனர்.

எங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்த பணத்தை பெற ஒரு வருடங்களாக மாநகராட்சி அலுவலகம் சென்று அலைந்து வருகிறோம் என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பதவி உயர்வு பெற்றும் இன்னும் அதே பதவியில் அந்த அலுவலர்கள் அமர்ந்திருப்பது ஏன் ?

மாநகராட்சி பதவியில் இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உயர் அதிகாரிகள் பணி நிறைவு பெற்ற உடன் அவரது பென்ஷன் உள்பட அனைத்து பணமும் உடனடியாக பெறுவது எப்படி ?

அடுத்த பதிவில் பணம் கேட்ட அதிகாரிகளின் பெயர், விபரம், ஆதாரங்களுடன் வெளிவரும் .

Leave A Reply

Your email address will not be published.