Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

0

திருச்சியில் கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது, இதில் கிராமலயா தலைமை நிர்வாக அதிகாரி நிறுவனர் பத்ம ஶ்ரீ. தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக சிறப்பு விருத்தினர் பேசுகையில் மாணவர்களுக்கு ஒற்றுமை மற்றும் அவர்களுக்கான இலக்கை அடைய இன்றைய நாளில் இருந்து பயணத்தை தொடங்குமாறு எடுத்துக் கூறினார்.

கேர் கல்வி குழுமத்தின், தலைமை நிர்வாக அதிகாரி பி. பிரதிவ் சந்த் விழாவை துவங்கி வைத்தார்.

கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகுமார் மாணவர்களுக்கான உறுதிமொழி மற்றும் பட்டமளிப்பு விழாவிற்கான அறிக்கையை வாசித்தார். மேலும் சிறப்பு விருந்தினர் தாமோதரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

குறிப்பாக பி.எஸ்சி இன்டீரியர் டிசைன் பாட பிரிவில் ஒன்று முதல் ஐந்து இடங்களையும் மேலும் பி.எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் பாட பிரிவில் ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் பெற்ற மாணவர்களுக்கு தர சான்றுகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.