Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கோர்ட் அருகே மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.

0

 

திருச்சியில் மோட்டார் சைக்கிள் சென்ற வாலிபர் மரத்தில் மோதி பரிதாப பலி.

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனி ஆல்பா நகரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33 ) .இவர் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டுடென்ட் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதில் காயமடைந்த அவரை மீட்டுடு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி கார்த்திகா கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.