Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரூ.1,100 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

0

 

ரூ.1,100 கோடி செலவில்
அமைக்கப்பட்டுள்ள திருச்சி விமான நிலைய
புதிய முனையம் இன்று முதல்
பயன்பாட்டுக்கு வந்தது.

விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு.

திருச்சி விமான நிலையத்தில் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ள, புதிய விமான நிலைய முனையத்திற்கு வந்த விமானங்களுக்கு தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையத்தை கடந்த ஜனவரி 2 – ததேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
திருச்சியில், 1,100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலைய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.
இன்று காலை, ஆறு மணி முதல், அனைத்து விமானங்களும் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் இனி புதிய முனையத்தில் இருந்து செயல்படும்.
75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில், ஆண்டுக்கு, 44.50 லட்சம் பயணிகளை கையாள முடியும்.
ஒரு மணி நேரத்திற்கு, 3,480 பயணிகளை கையாள முடியும், 106 இமிகிரேஷன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10 ஏரோ பிரிட்ஜ்கள் உள்ளன.
முதற்கட்டமாக, 5 ஏரோ பிரிட்ஜ்களை பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 5 ஏரோ பிரிட்ஜுகளும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
புதிய முனையும் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால், பஸ் சேவை இயக்க வேண்டுமென்று போக்குவரத்து துறையில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு, 17.60 லட்சம் பயணிகள் கையாளப்பட்டனர். இதில், சர்வதேச பயணிகள் மட்டும், 13.50 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முனையத்தின் சிறப்பு அம்சங்கள்:

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையம் செயல்பட துவங்கியது . ஏற்கனவே உள்ள முனையம் மூடல். அதில் இனி எந்தவித விமான போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கு கையாளுவதற்கான பணிகள் நடைபெறாது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் செயல்பட துவங்கிய புதிய முனையத்தில் வருடத்திற்கு 4.5 மில்லியன்(45 லட்சம்) பயணிகளை கையாள முடியும.ஒரே சமயத்தில் 10 விமானங்களில் உள்ள பயணிகளை கையாளலாம். புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கும் வசதி உள்ளது 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் தரையிறங்கி புறப்படலாம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ.1112 கோடியில் புதிய டெர்மினல் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான திட்டத்தை 2019ம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 3 ஆண்டுகளுக்குள் புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டு, பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் 02.01.2024 அன்று திறந்து வைத்தார்.

ஒரே நேரத்தில் 3500க்கும் மேற்பட்ட பயணிகள் கையாளலாம்.
750 கார்கள், 250 டாக்சிகள், 10 பஸ்களை நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. புறப்பாடுக்காக 10 கேட்கள், வருகைக்காக 6 கேட்கள், 60 செக்-இன் கவுன்டர்கள், இமிகி ரேஷன் பிரிவுக்காக தலா 40 கவுண்டர்கள், 15 எக்ஸ்ரேமெஷின்கள், 3 விஐபி லவுஞ்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் உடமைகளை எடுத்து வர சாய்வுதள கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட உள்ளது. அதிநவீன வசதிகளுடன்கூடிய கண்காணிப்புகோபுரம் மூலம் ரன் வேயின் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும்.
ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் உருவாக்கப்பட்டுள்ளது திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய முனையம்.

Leave A Reply

Your email address will not be published.