அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மைனர் போன்று இருப்பதால் அவருக்கு மைனர் செயின் அணிவிக்கப்படும் . திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் வெற்றியைத் தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் திருச்சி, கோட்டை கீழரண் சாலை பகுதியில் நடைபெற்றது. திருச்சி காந்திமார்க்கெட் பகுதி செயலாளர் பாபு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர்கள் மனோகரன், சுப்பிரமணி ஆகியோர் வரவேற்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி,மாநகரச் செயலாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசினர்.
அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது :-

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில்,
அதிக வாக்குகளை பெற்று தரும் மாவட்ட செயலாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருக்கு (அன்பில் மகேஷ் பொய்யாமொழி) 10 பவுன் தங்க சங்கிலி அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்..
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ” “மைனர்” போன்று இருப்பதால் அவருக்கு மைனர் செயின் அணிவிக்கப்படும் எனக் கூறி சிரிப்பலையை உண்டாக்கினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி திமுகவிற்கு அதிக வாக்குகளை பெற்று தந்துள்ளது.. அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
முன்னாள் முதல்வர்களும், திமுக தலைவர்களுமான அண்ணா, மு. கருணாநிதி உள்ளிட்டோரால் வளர்ந்துள்ள இயக்கம் திமுக. அதன் வரலாற்றில் திமுக தனியாக தேர்தலில் நிற்பது தொடங்கி பல்வேறு முக்கிய முடிவுகள் திருச்சியில்தான் எடுக்கப்பட்டு அவை வெற்றியும் பெற்றுள்ளன என்பது அனைவரும் அறிந்தது என்றாலும் அதை நினைவு படுத்தவேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி, திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று அதிக வாக்குகளையும் பெற்றுள்ளது.
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் 60 மாதகாலம் தமிழகத்தை ஆண்டுள்ளது திமுக. அந்த காலங்களில் சுமார் 50 முறை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருச்சிக்கு வந்துள்ளார். அதுமட்டுமல்ல, திருச்சியில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பைக் காண திருச்சி வந்தார்.
அதன்பின்னர் அவர் கொண்டு வந்த திட்டம்தான் குழுமாயி அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தொட்டிப்பாலம் திட்டம். அதனால்தான் திருச்சியில் வெள்ள பாதிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல திருச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து முக்கியத் திட்டங்களையும் கொண்டு வந்ததும் அவர்தான். அவரது வழியிலேயே அவரது மகனான தற்போதையை முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒரு மாநில முதல்வர் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதுபோல சிறந்த முதல்வராக செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் எத்தனையோ மாவட்டங்களில் எத்தனையோ திட்டங்கள் இருக்க, திருச்சி மாவட்டத்துக்கென பஞ்சப்பூரில் புதிய பேருந்து முனையத்தை ரூ. 3400 கோடியில் அமைக்க ஒப்புதல் அளித்தார் நமது முதல்வர்.
அதுமட்டுமல்ல தற்போது நமது நாட்டின் பிரதமரை நியமிக்கும் முக்கியத்துவம் உள்ள தலைவராக வளந்துள்ளார். அவரது தந்தையார்கூட 30 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைக்குப் பின்னரே அந்த தகுதியை பெற்றார். ஆனால்
இவரோ 3 ஆண்டுகளிலேயே அந்த தகுதியை பெற்று நாடு போற்றும் தலைவராக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் திமுக வளர அதிகப்படியான வாக்களித்த வாக்காளர் பெருமக்களுக்கும், வெற்றிக்கு உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது :-
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் திருச்சி தெற்கு மாவட்டம் கூடுதலாக வாக்குகளை பெற்றுள்ளது. வெற்றி பெற்ற திமுக எம்பிக்களில் அமைச்சரின் மகன் அருண் நேரு, சுமார் 3.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்களில் மூன்றாமிடத்தை பெற்றுள்ளார். அதுபோல திருச்சியில் 3 மாவட்ட வேட்பாளர்கள் வெற்றியும் முதன்மைச் செயலாளருக்கு வெற்றி, அவரது வெற்றி தமிழக முதல்வர் மற்றும் இளைஞரணிச் செயலாளர் ஆகியோரின் வெற்றியாகும். இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்..சேகரன், செந்தில், மாநகர துணைச் செயலாளர் சந்திரமோகன், ராஜேஸ்வரன்,பகுதி செயலாளர்கள் மருந்து கடை மோகன், கொட்டப்பட்டு தர்மராஜ், ஏ.எம்.ஜி விஜயகுமார், மணிவேல், சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் கே.கே.கே.கார்த்திக்
மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.