Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.65 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்.

0

 

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியத் தலைநகா் கோலாலம்பூருக்கு ஏா் ஏசியா விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினா் சோதனை செய்தனா்.

அப்போது பயணியொருவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அமெரிக்க டாலா் 6 ஆயிரம், இந்தியப் பணம் ரூ.5.5 லட்சம், மலேசியன் ரிங்கிட் 1100 என ரூ. 10.65 லட்சம் மதிப்பிலான பணத்தாள்களை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Leave A Reply

Your email address will not be published.