Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உங்களோடு இருப்பேன் , உங்களுக்காகவே இருப்பேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. திருச்சி அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்.

0

'- Advertisement -

 

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

நடந்து முடிந்த (தமிழகத்திற்கான) நாடாளுமன்றத் தேர்தலில் (19-04-2024),  அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர், டிடிவி தினகரன் அவர்களால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட என்னை, அறிவித்த நொடியில் இருந்து அங்கீகரித்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை உலக அளவில், பெருமைமிகு இடத்திற்கு அழைத்துச் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத போகும் இந்த தேர்தலில், மண்ணிற்காக, மக்களுக்காக, சமுதாயத்திற்காக சமூக நீதிக்காக, தமிழகத்திற்காக, தேசியத்திற்காக போராடும் தலைவர்களை ஒருங்கிணைத்த தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி என்பது, ஒற்றுமையான, இளமையான தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அஸ்திவாரம்.

கடந்த 25 நாட்களாக, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தமிழகத்தை துரோக சக்திகளிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மீட்க வேண்டும்,  அதற்கு இந்தத் தேர்தலில், வெற்றி ஒன்றே குறிக்கோளாக எண்ணி, தேசிய ஜனநாயக கூட்டணி என்பதே இந்த சமுதாயத்திற்காக போராடும் ஒரு குடும்பம் என்ற முறையில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கடும் களப்பணி ஆற்றிய அத்தனை சொந்தங்களுக்கும், மனமார்ந்த நன்றிகளை பெருமிதத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Suresh

இனிவரும் காலங்களில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் தலை விரித்தாடும் போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், எளிய மனிதர்களுக்கான அங்கீகாரத்தை பெறவும், ஒற்றுமையுடன் பணியாற்றுவோம், முன்னெடுப்போம் என்பதே கடந்த சில நாட்களில் நாம் எடுத்துக்கொண்ட உரம் ஏறிய உறுதிமொழிகள்.

மக்களுக்கான பணிகளில் அதை நோக்கி நாம் நகருவோம்.

இத்தேர்தலில், அதிகார வர்க்கங்களை மீறி, சந்தர்ப்பவாதிகளின், பிரிவினைவாதிகளின் திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களை மீறி, “புதிய மாற்றத்திற்கான, இளைய தலைமுறைக்கான, ஒற்றுமையான, பொருளாதார வளர்ச்சிக்கான திருச்சி நாடாளுமன்ற தொகுதியை கருத்தில் கொண்டு,” வெற்றி சின்னமாம் “பிரஷர் குக்கர்” சின்னத்தில் வாக்களித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களோடு இருப்பேன் உங்களுக்காகவே இருப்பேன்.

என திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.