Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் வாக்களிப்பதை செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை தடுத்த தேர்தல் அலுவலர் . வாக்களிக்காமல் திரும்பச் சென்ற முன்னாள் எம்பி குமார்

0

'- Advertisement -

புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு :
வாக்களிக்காமல் வெளியேறிய அதிமுக முன்னாள் எம்பி

திருச்சி வாக்குச்சாவடியில்
இன்று பரபரப்பு

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்சல் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப. குமார் காலையில் வாக்களிக்க சென்றார்.

பின்னர் வாக்குச்சாவடி மையத்துக்குள் வரிசையில் நின்று அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர்.
அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தனர்.


இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் சிந்தை முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆவேசம் அடைந்த குமார் நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பி யாக இருந்திருக்கிறேன்.
விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன் என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேறினார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது .

காலை மக்கள் மன்றத்தில்  திமுக அமைச்சர் கே என் நேரு வாக்களிப்பதை  படம் எடுக்க அனுமதித்த தேர்தல் அலுவலர்கள்  அதிமுக விஐபிகளை  படம் எடுக்க அனுமதிக்காதது ஏன் என தெரியவில்லை . தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வழங்கியது ஏன் என தெரியவில்லை  குழம்பியவாறு சென்றனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.