தமிழகத்தில் தற்போது மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது தமிழ் பால் .
திருச்சி செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி சார்பில் பாலக்கரை, எடத்தெரு பழைய கோயில் எதிரில் தமிழ் பால் விநியோக மையம் திறப்பு விழா நடைபெற்றது .
இந்த விநியோகம் மையத்தை ஜிகே டைரி நிர்வாக இயக்குனர் தியாகராஜன் திறந்து வைத்தார் . முதல் விற்பனையை வணிகர் சங்ககளின் பேரமைப்பின் திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர் மற்றும் தொழிலதிபர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர் .
இந்த திறப்பு விழா நிகழ்ச்சியினை செந்தூர் வேலன் மில்க் ஏஜென்சி உரிமையாளர்கள் பரணி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் .