Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் லாட்டரி விற்ற 4 பேர் லாட்டரி சீட்டுகளுடன் கைது.

0

 

திருச்சி பாலக்கரை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் ரெயில்வே கேட் அருகில் லாட்டரி சீட் விற்பனை செய்து வருவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்த போது லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த அரவிந்த் குமார் (வயது 39), மோகன் (வயது 45) ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்த் (வயது 39)ஜெயில் கார்னர் ஆனந்த் பாபு (வயது34) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 1236, இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.