கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் குடும்பத்துடன் வரும் தேர்தலை புறக்கணிப்போம். ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு .
தகுதிக்கேற்ப ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேறாத பட்சத்தில் குடும்பத்துடன் தேர்தலை புறக்கணிப்போம் – ஆரம்ப சுகாதார நிலைய இயன் முறை மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆலோசனை மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
பின்னர் சங்கத்தின் தலைவர் ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்…
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு
தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும். THE NATIONAL COMMISSION FOR ALLIED AND HEALTHCARE Professional Act 2021 ஐ தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அனைத்து மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மகளிர் இயன்முறை மருத்துவர்களுக்கும் அளித்து, அதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்களை நிறைவேற்றாத நிலையில் வருகின்ற தேர்தலை புறக்கணிப்போம். தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தங்களது குடியுரிமையை நிராகரிப்போம். எங்களது துறையை சார்ந்த 50 ஆயிரம் குடும்பங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம் என தெரிவித்தார்.