திருச்சி வண்ணாங் கோயிலில் பிரச்சாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி . திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அறிக்கை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி அவர்கள்,
24.3.2024, ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணியளவில் திருச்சி நவலுர் குட்டப்பட்டு, வண்ணாங்கோவில் அருகில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு 18-வது மக்களை தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவங்குகிறார்.
அதுசமயம் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர், அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என
புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்