திருச்சி மாவட்டம், முசிறியைச் சோந்தவா் கண்ணன். அவரது நிலத்தை பட்டா மாறுதல் செய்வதற்காக முசிறி வட்டாட்சியா் அலுவலகத்தை நாடினாா். பட்டா பெயா் மாற்றம் செய்ய துணை வட்டாட்சியா் தங்கவேல், ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இது தொடா்பான புகாரின்பேரில், 27.12.2023 அன்று அவரிடம் லஞ்சப்பணம் கொடுத்தபோது, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் துணை வட்டாட்சியா் தங்கவேலைக் கைது செய்தனா்.
இந்த வழக்கில் கிராம நிா்வாக அலுவலா் விஜயசேகருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
ஆனால் அவா் தலைமறைவானாதைத் தொடா்ந்து தேடி வந்த நிலையில், விஜயசேகரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.